பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர்மழையால் ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது. வால்பாறை, சோலையாறு, பரம்பிக்குளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியது. தொடர்ந்து பெய்த மழையால் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்த உபரி நீர் மற்றும் தொடர் மழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால், ஆழியாறு அணையும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. சோலையாறு அணையில் 163.19 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4,213 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,976 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 71.93 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 7,283 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அதில் அணையின் ஸ்பில்வே மதகுகள் வழியாக விநாடிக்கு 6,180 கனஅடி தண்ணீரும், தூணக்கடவு டனல் வழியாக 1,100 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 117.90 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 997 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையில் இருந்து 187 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.திருமூர்த்தி அணையின் 60 அடி உயரத்தில் 53.15அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 639 கனஅடி நீர் வரத்தாக உள்ளது.
நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு நிலவரம் (அளவுகள் மில்லி மீட்டரில்) வருமாறு: சோலையாறு - 52, பரம்பிக்குளம்- 97, ஆழியாறு- 7.5, திருமூர்த்தி- 1.5, மேல்நீராறு- 68, கீழ்நீராறு- 57, வால்பாறை - 52, பொள்ளாச்சி - 19, மணக்கடவு- 17.2, சர்க்கார்பதி- 25, காடம்பாறை- 12, நவமலை- 4 என்ற அளவில் மழை பெய்தது..ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களில் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.