உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று மண்டல அபிேஷகம்

 ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று மண்டல அபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை விழா நேற்று மாலை பக்தி இன்னிசையுடன் துவங்கியது. இன்று, காலை, 11:00 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமி, பரிகார மூர்த்திகள் தேர்த்திருவீதி உலா நடக்கிறது. குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி நேற்றுமுன்தினம் அகண்டநாம பஜனை குழுவினரால் பஜனை நடைபெற்றது.அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை, 5:00 மணி வரை தொடர்ந்து, 24 மணி நேரம் அகண்டநாம பஜனை நடந்தது. நேற்று காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை பால்குட தீர்த்தாபிேஷகம் நடந்தது. மாலையில், 108 திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று மண்டல பூஜையையொட்டி காலை, 5:00 மணிக்கு நடை திறப்பு, நிர்மால்யா தரிசனம், உதயாஸ்தமன பூஜை, காலை, 5:30 மணிக்கு மஹா கணபதி ேஹாமம் நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு சிறப்பு மஹா அஷ்டாபிேஷகம், மாலை, 4:00 மணிக்கு சக்தி கலசம் கொண்டு வருதல், திருவாபரண பெட்டி ஊர்வலம் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு திருவாபரண அலங்கார பூஜை மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. 7:00 மணிக்கு அன்னதானம், 7:30 மணிக்கு ஐயப்ப பக்தர்கள், கோவில் ஹரிகந்த ஸ்ருதி பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.இரவு, 10:30 மணிக்கு படி பூஜை, மஹா தீபாராதனையும், இரவு, 11:30 மணிக்கு ஹரிவராசனம், நடை சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை