உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில ஹாக்கிப்போட்டியில் அரசுப்பள்ளிகளுக்கு பதக்கம்

மாநில ஹாக்கிப்போட்டியில் அரசுப்பள்ளிகளுக்கு பதக்கம்

கோவை : நேருநகர், காளப்பட்டியில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், ஜீ.ரங்கசாமி நாயுடு நினைவு ஹாக்கிப் போட்டி நடந்தது.தமிழகளவில் நடந்த இப்போட்டியை, கல்லுாரியின் செயலர் சேகர், முதல்வர் ராஜ்குமார் துவக்கி வைத்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளிலிருந்து, 16 அணிகள் மற்றும் 130க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், விழுப்புரம் சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் வென்றன. பதக்கங்களுடன் கூடிய பரிசுகளை, தமிழ்நாடு ஹாக்கி பிரிவுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் மாணவர்களுக்கு வழங்கி கவுரவித்தார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சுப்பையாதாஸ், பேராசிரியர்கள், மாணவர்கள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை