உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசடி வழக்கில் மாயமான நபர் கோர்ட்டில் ஆஜராக கெடு

மோசடி வழக்கில் மாயமான நபர் கோர்ட்டில் ஆஜராக கெடு

கோவை: மோசடி வழக்கில் தலைமறைவான நபர், கோர்ட்டில் ஆஜராக கெடு விதித்து உத்தரவிடப்பட்டது. கோவை, வடவள்ளி அருகேயுள்ள பொம்மனாம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார்; மோசடி வழக்கில், மாநகர குற்றப்பிரிவு போலீசாரால், கடந்த 2021ல் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவர் மீது, கோவை, ஜே.எம்:7, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஆனால், விசாரணையின் போது, கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால், பிடிவாரன்ட் உத்தரவை கோர்ட்டில் திருப்பி அளித்தனர். நந்தகுமாரை தேடப்படும் நபராக அறிவித்த நீதிமன்றம், வரும் 26ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ