உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தாயுமானவர் திட்ட பயனாளர்களுக்கு தவறாமல் பொருட்கள் வழங்க உத்தரவு

 தாயுமானவர் திட்ட பயனாளர்களுக்கு தவறாமல் பொருட்கள் வழங்க உத்தரவு

கோவை: தாயுமானவர் திட்ட பயனாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் தவறாமல், பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என, மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். புயல் காரணமாக மழை பெய்து வருவதால், தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கும் தேதியை, இந்த மாதம் மட்டும் மாற்ற வேண்டும் என, ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில், 'தாயுமானவர் திட்டத்தில் பலன் பெறும் பெறும் அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில், வழக்கம் போல் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும்; ரேஷன் கடை விற்பனையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொதுவிநியோகத்திட்டப் பொருட்கள் வழங்கப்படும் நாட்கள் பற்றிய விவரத்தை, நியாய விலைக் கடைகளில் எழுதி வைக்க வேண்டும்' என, மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி