உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே ஊராட்சியில் இருவருக்கு பத்மஸ்ரீ!

ஒரே ஊராட்சியில் இருவருக்கு பத்மஸ்ரீ!

மேட்டுப்பாளையம்;ஒரே ஊராட்சியில் இருவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள தாசனூரை சேர்ந்தவர் பத்திரப்பன், 87; கிராமிய கலைஞர். இவர் தனது, 15வது வயதில் இருந்து, கிராமிய கலைகளை கற்று வந்துள்ளார். கடந்த, 60 ஆண்டுகளில் எவ்வித பிரதிபலன் பார்க்காமல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் வள்ளி கும்மி கிராமிய கலையை, இலவசமாக கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.தற்போது சிறிய ஓட்டு வீட்டில், இரண்டு பசு மாடுகளை வளர்த்து, விவசாயம் செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயைக் கொண்டு, வாழ்ந்து வருகிறார்.எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்கும் கிராமிய கலைஞர் பத்திரப்பனுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க அறிவித்துள்ளது. தாசனுார் கிராம கிராம மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.ஏற்கனவே, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு, 107; 2021ம் ஆண்டு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது.இப்படி ஒரே ஊராட்சியில், இருவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது போன்று, இந்தியாவில் வேறு எங்காவது, கிடைத்திருக்க வாய்ப்பு குறைவுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை