பூங்கா முழுவதும் குப்பை
கணபதி, ராஜா நகரில், சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. காய்ந்த இலைகள் மற்றும் மரக்குப்பை பூங்கா முழுவதும் பரவிக்கிடக்கிறது. சீரான இடைவெளியில், தண்ணீர் பாய்ச்சாததால், பூங்காவிலுள்ள செடிகள் காய்ந்து வருகின்றன.- பாலகிருஷ்ணன், கணபதி. குப்பை தேக்கம்
ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா பள்ளி அருகில், பி.எம்.சாமி காலனி, முதல் வீதியில், சாலையோரம் ஒரு மாதமாக குப்பை தேங்கி கிடக்கிறது. குப்பையை அகற்றுவதுடன் மீண்டும் இப்பகுதியில், குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.- காமராஜ், ஆர்.எஸ்.புரம். வேகத்தடை வேண்டும்
வடவள்ளி, லட்சுமி நகர், ஆர்ச் முன் உள்ள வளைவில், அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து நடக்கிறது. பள்ளிகள் நிறைந்த பகுதி என்பதால் மாணவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. வளைவில், வேகத்தடை அமைப்பதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம்.- வாணி, வடவள்ளி. சாக்கடை வசதியில்லை
விளாங்குறிச்சி, லட்சுமி நகர், ஸ்ரீ நகர் ஆகிய பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் வசதி இன்னும் அமைக்கப்படவில்லை. வீடுகளிலிருந்து கழிவுநீரை முறையாக வெளியேற்ற முடியாமல், குடியிருப்போர் தவிக்கின்றனர். சாக்கடை கால்வாய் வசதி அமைக்க வேண்டும்.- கிருஷ்ணன், விளாங்குறிச்சி. வேகத்தடை வேண்டும்
மருதமலை மெயின் ரோடு, பாரதியார் பல்கலை, ஐ.ஓ.பி., காலனி நுழைவு சாலை முன், சாலையை கடக்க பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். வேகமாக வரும் வாகனங்களால், விபத்து நடக்க வாய்ப்புள்ளது. வேகத்தடை அமைத்து தர வேண்டும்.- முத்துக்குமார், வடவள்ளி. இரவில் தொடரும் அச்சம்
வடவள்ளி, வைகை வீதியில், மகாராணி அவென்யூவில், கடந்த ஒரு வருடமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் நடமாட பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.- கிருஷ்ணன், வடவள்ளி. புழுதி பறக்கும் சாலை
உடையாம்பாளையம், செந்தில்நகரில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தார் பெயர்ந்து மண், கற்களாக இருக்கிறது. வாகனங்கள் செல்லும் போது, அதிக புழுதி பறக்கிறது.- முருகேஷ், செந்தில்நகர். கடும் துர்நாற்றம்
ரத்தினபுரி, அருள் நகரில், சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த ஆறு மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது.- கவிதா, ரத்தினபுரி. விபத்திற்கு வாய்ப்பு
திருச்சி ரோடு மேம்பாலத்தில், பிளக்ஸ் பேனர், கம்பத்திலிருந்து விழும் நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.- சந்தோஷ், சிங்காநல்லுார். காயும் பூச்செடிகள்
குறிச்சி குளக்கரையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், பராமரிக்கப்படும் அழகிய பூச்செடிகள், மரங்கள் காய்ந்து வருகின்றன. செடிகளுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.- முருகன், குறிச்சி.