உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூமாரியம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பூமாரியம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வால்பாறை;நடுமலை எஸ்டேட் பூமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த, திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன். இங்குள்ள பூமாரியம்மன் கோவிலின் 64ம் ஆண்டு திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் நேற்றுமுன்தினம் இரவு கும்பம்பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடைபெற்றது.காலை, 10:30 மணிக்கு முளைப்பாரி கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். பகல், 12:30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், பிப்., 6ம் தேதி வரை நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி