உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

தொண்டாமுத்தூர் : லாலிரோடு முதல் நரசீபுரம் வரையிலான சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை, மீண்டும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை மேற்கு புறநகரில், மருதமலை சாலை, நரசீபுரம் சாலை, சிறுவாணி சாலை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையாக உள்ளது.மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், அடிக்கடி வாகன விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 8ம் தேதி, துணை ஜனாதிபதி வருகையையொட்டி, லாலி ரோடு முதல் நரசீபுரம் வரையிலான சாலையில், 25 இடங்களில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இந்த சாலையில், சாலையை ஒட்டியுள்ள பகுதியிலேயே, 10 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், பள்ளி மாணவர்கள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர்.பள்ளி பகுதிகளில், வாகனங்களில் வருவோரும், வேகத்தை குறைப்பதில்லை. அசம்பாவிதங்கள் நிகழும் முன், வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் சாலை விதிமுறைகளின் படி, வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி