மேலும் செய்திகள்
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
8 minutes ago
இன்றைய மின்தடை
8 minutes ago
அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
9 minutes ago
வடக்கு நகர தி.மு.க. சார்பில் அசைவ விருந்து வழங்கல்
10 minutes ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் ஆய்வு நடத்தினார். அப்போது, சங்கத்தின் தயாரிப்புகளான 'செழுமை' நாட்டு சர்க்கரை, 'பகலவன்' இட்லி பொடி, பருப்பு பொடி மற்றும் 'ஆழியார்' கடலை எண்ணெய், நல்லெண்ணை, தேங்காய் மற்றும் கொப்பரை ஏல விற்பனையை பார்வையிட்டார். தொடர்ந்து, கம்ப்யூட்டர் வாயிலாக விற்பனை மேற்கொள்ளவும், வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். சங்க வளாகத்தில் மேற்கொள்ளப்படும் திருமண மண்டப கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். அதன்பின், 'ஆழியார்' பச்சை பயிர் மற்றும் உருட்டு உளுந்து ஆகியவற்றின் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். உடன் கோவை மண்டல இணைப் பதிவாளர் அழகிரி, கோவை சரக துணைப் பதிவாளர் தினேஷ்குமார், பொள்ளாச்சி சரக துணைப் பதிவாளர் வடிவேல், துணைப்பதிவாளர்கள் அகல்யா, ஜீவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
8 minutes ago
8 minutes ago
9 minutes ago
10 minutes ago