வெள்ளானைப்பட்டியில் நாளை சிறப்பு முகாம்
கோவில்பாளையம்; வெள்ளானைப்பட்டி மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சிகளுக்கு, நாளை (6ம் தேதி) 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தமிழக அரசு சார்பில், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அன்னூர் தாலுகாவில் நாளை (6ம் தேதி) வெள்ளானைப்பட்டி மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, வெள்ளானைப் பட்டி, செல்வநாயகி மண்டபத்தில், காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தாட்கோ உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 'உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்,' என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.