உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துளிர்விடும் தேயிலை: விவசாயிகள் மகிழ்ச்சி

 துளிர்விடும் தேயிலை: விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை: வால்பாறையில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறை மலைப்பகுதியில், தேயிலை தொழில்முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் அக்., மாதம் வரை ஐந்து மாதங்களாக, தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், தேயிலை செடிகள் துளிர்விட முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது வடகிழக்குப்பருவ மழை சாரல் மழையாக பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக இடையிடையே வெயில் நிலவுவதால், எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதோடு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த சில நாட்களாக வெயில் கலந்த பனிமூட்டம் நிலவுகிறது. மழைப்பொழிவு குறைந்த நிலையில், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. பருவ மழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 50 கிலோ முதல் 60 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி