மேலும் செய்திகள்
இளநீர் விலை ரூ.2 குறைந்தது
04-Nov-2024
பொள்ளாச்சி ; ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் குறைந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, 30 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 12,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களை ஒப்பிடுகையில், வீரிய ஒட்டு ரக இளநீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. செவ்விளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.அதேபோல, தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் அதிகப்படியான விவசாயிகள் இளநீர் விலை குறைந்துள்ளனர். இதனால், இளநீருக்கு வெட்டாமல், தேங்காய் விற்பனைக்கு முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
04-Nov-2024