உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடையில் குவிந்த சுற்றுலா பயணியர்

கொடையில் குவிந்த சுற்றுலா பயணியர்

கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணியர் முகாமிட்டனர்.கோடை வெயிலை சமாளிக்க குளுகுளு நகரான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். எனினும் மதியம் 3 :00 மணிக்கு பின் காற்றில் ஈரப்பதம், பனியின் தாக்கம் என குளிர் வாட்டி வதைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ