| ADDED : ஜன 11, 2024 11:55 PM
கோவை:கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் சாலைகளில் யாசகம் பெற்ற, 14 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதனை தடுக்க மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை மற்றும் சிக்னல்களில் யாசகம் பெறுபவர்கள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோரை மீட்டனர். நேற்று ஒரே நாளில் 14 பேரை மீட்ட போலீசார் அவர்களை ஆர்.எஸ்.,புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சிக்னல்களில் யாசகம் பெறுபவர்களையும், சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களையும் மீட்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாநகரப் பகுதிகளில் ரோந்து சென்றோம். அப்போது, 10 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகளை என, 14 பேரை மீட்டுள்ளோம். தொடர்ந்து மாநகரம் முழுவதும் ரோந்து சென்று யாசகம் பெறுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளோம்,” என்றனர்.