| ADDED : மே 15, 2024 11:13 PM
பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர் சுதர்சனராஜன் 591 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். மாணவர் பிரபாகர் 586 பெற்று இரண்டாமிடம், மாணவர் ஷியாம்சுந்தர் 585 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். மாணவர் லிங்கேஷ் 584, மாணவி நிவேதா 583, மாணவர் விஷ்ணுசெல்வன் 577, மாணவி தனுஷியா 571 மதிப்பெண் பெற்றனர்.தேர்வு எழுதிய 408 மாணவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றனர். கணினி அறிவியல் பாடத்தில் 4 பேர், இயற்பியல் பாடத்தில் 2 பேர், கணிதத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.தமிழ் பாடத்தில் 2 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தாளாளர் வீரதாஸ், முதன்மை முதல்வர் வேலண்டினாலெஸ்லி, முதல்வர் மணிகண்ணடன் உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கினர்.