உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 கடைகளை உடைத்து திருட்டு விருத்தாசலத்தில் துணிகரம்

2 கடைகளை உடைத்து திருட்டு விருத்தாசலத்தில் துணிகரம்

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அருகே உள்ள பாபு மளிகை கடை உரிமையாளர் செந்தில், 45. இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.40 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.அதேபோல், ஜங்ஷன் சாலையில் அரசன் டிரேடர்ஸ் பர்னிச்சர் கடையின் பூட்டை உடைத்து மொபைல் போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 2 கடைகளின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை