உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே குடி போதையில் தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த வெ.பெத்தாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தவேல், 24; பெருமாள், 45; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.நேற்று ஆனந்தவேல் வீட்டில் இருந்த போது, குடிபோதையில் வந்த பெருமாள், ஆனந்தவேலிடம் தகராறு செய்து கல்லால் தாக்கினார்.புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், பெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை