உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் பலி

அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் பலி

கடலுார், : கடலுார் முதுநகர் தேசாயி சந்தையை சேர்ந்தவர் ஞானபிரகாசம் மகன் விக்னேஷ்வரன், 27; ஐ.டி.ஐ., படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.சின்ன பிள்ளையார் மேடு ஆறுபடை நகரில் வந்தபோது, சாலையோரம் மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் கம்பி விக்னேஷ்வரன் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட விக்னேஷ்வரனை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது தந்தை ஞானப்பிரகாசம், அலட்சியமாக செயல்படும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ