உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேல்காங்கேயன்குப்பத்தில் ரூ.14 லட்சத்தில் போர்வெல்

மேல்காங்கேயன்குப்பத்தில் ரூ.14 லட்சத்தில் போர்வெல்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சியில், புதிய போர்வெல் போடும் பணியை ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சியில் குடிநீர் வசதிக்காக, மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தில், ரூ. 14 லட்சம் செலவில் புதிய போர்வெல் போடப்படுகிறது. பணி துவக்க நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் பங்கேற்று துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன்,ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகர், மாவட்ட பொறியாளர் கலைசெல்வன், ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம், தலைவர் அம்பிகாகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை