உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புற்றுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

புற்றுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்: கடலுார் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவர்கள், உலக நுரையீரல் புற்றுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.ஊர்வலத்தை ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு துறை அதிகாரி டாக்டர் அபிநயா, பள்ளி தாளாளர் கவிதா கண்ணன், தலைமை ஆசிரியர் அப்துல் சுபஹான் உட்பட அனைவரும் புற்றுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் எமன் வேடமிட்டு, டவுன் ஹாலில் இருந்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ