உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்றவர் மீது வழக்கு பதிவு

குட்கா விற்றவர் மீது வழக்கு பதிவு

விருத்தாசலம் : தடை செய்யப்பட்ட குட்கா விற்ற முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தில் உள்ள பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக, கடை உரிமையாளர் தேவராஜூலு, 70, என்பவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ