உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சின்னநற்குணம் கோவில் கும்பாபிேஷகம்

சின்னநற்குணம் கோவில் கும்பாபிேஷகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணம் கிராமத்தில் ஐயனார் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அருகே சின்னநற்குணம் கிராமத்தில் பூரணி புஷ்கலாம்பிகை சமேத ஐயனார் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர், புற்றுமாரியம்மன், வீரபத்திரசாமி கோவில்கள் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. பூஜைகள் கடந்த 8 ம் தேதி துவங்கியது.கும்பாபிேஷக தினமான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலையும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி