உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மர்மமான முறையில் பசு மாடுகள் இறப்பு

மர்மமான முறையில் பசு மாடுகள் இறப்பு

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே மர்மமான முறையில் 3 பசு மாடுகள் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் அடுத்த புலியூரைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ், 55; கதிர்வேல், 60; இவர்களது மூன்று மாடுகள் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அதே பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது.மாலை 5:00 மணியளவில் குருநாதன் என்பவரது நிலத்தின் அருகே உள்ள சீமை கருவேல மர தோப்பில், மர்மமான முறையில் மூன்று பசு மாடுகள் இறந்து கிடந்தது.தகவலறிந்த ஆலடி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர். 3 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை