உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட அளவில் கட்டுரை போட்டி மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு

மாவட்ட அளவில் கட்டுரை போட்டி மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு

சேத்தியாத்தோப்பு, - தமிழ்நாடு நாள் விழாவில் மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதலிடம் பிடித்து பரிசு பெற்ற வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு தொகை, சான்று வழங்கினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வுகுப்பு மாணவி ஆன்ட்ரியா, கடந்த மாதம் 17 ஆம் தேதி கடலுாரில் நடந்த மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து பரிசு பெற்றார்.மாணவி ஆன்ட்ரியாவை பள்ளி தாளாளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை சான்று வழங்கினர்.பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பரிசு பெற்ற மாணவி ஆன்ட்ரியாவை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ