உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் இறப்பில் சந்தேகம்; போலீசில் தந்தை புகார்

மகள் இறப்பில் சந்தேகம்; போலீசில் தந்தை புகார்

கடலுார் : மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கொடுக்கூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்,46; இவரது மகள் கவுசல்யாவை, 23; கடலுார் அடுத்த நாணமேடு கிராமத்தில் உள்ள தனது சகோதரி மகன் தினேஷ், 28; என்பவருக்கு 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார்.இந்நிலையில் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற கவுசல்யாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து, கடந்த 18 ம் தேதி, கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கவுசல்யா, படுக்கை அறையில் துாக்கில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ்குமார், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரெட்டிச்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி