உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

விருத்தாசலம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ரோட்டரி சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமிற்கு, ரோட்டரி சங்க தலைமை அசோக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வக்குமாரி முன்னிலை வகித்தார். செயலாளர் பரமசிவம் வரவேற்றார். மருத்துவர் விஜய், ஆடிட்டர் டேவிட் ராஜா, பொறியாளர் சாமுவேல் கென்னடி, சுதன், ஜாகிர் உசேன், பள்ளி ஆசிரியர்கள் மேரி பிளாரன்ஸ், சுகந்தி, அமிருன், அன்பரசி, பிரபா, புஷ்பா, கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை ராஜ்குமார், மணிகண்டன், சல்மன் பாரிஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாணவிகளுக்கு கண் பரிசோதன செய்து, ஆலோசனை வழங்கினர்.பொருளாளர் பிரசன்னா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி