உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீனவர் தீக்குளிக்க முயற்சி காவல் நிலையம் முன் பரபரப்பு

மீனவர் தீக்குளிக்க முயற்சி காவல் நிலையம் முன் பரபரப்பு

புதுச்சத்திரம்: மீன் பிடிக்க கிராம நிர்வாகத்தினர் தடை விதிப்பதாகக் கூறி காவல் நிலையம் முன் மீனவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.புதுச்சத்திரம் அடுத்த குமாரபேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அரசு, 39; மீனவர். இவரை அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாகத்தினர் கடலில் மீன் பிடிக்கச் செல்ல தடைவித்ததாக கூறி, குடிபோதையில் புதுச்சத்திரம் காவல் நிலையம் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். உடன் போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை