உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தகர ஷீட் சரிந்து பட்டதாரி பலி; பெண்ணாடம் அருகே சோகம்

தகர ஷீட் சரிந்து பட்டதாரி பலி; பெண்ணாடம் அருகே சோகம்

கடலுார் : இரும்பு கடையில் லோடு இறக்கும் பணியில் ஈடுபட்ட வாலிபர், தகர ஷீட் சரிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முகுந்தன், 28; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். அ.தி.மு.க., இளைஞர் பாசறை நிர்வாகியான இவர், பெண்ணாடம் மேற்கு மெயின் ரோட்டில் உள்ள இரும்பு கடையில் நேற்றிரவு 7:00 மணிக்கு லாரியில் இருந்து லோடு இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, இரும்பு தகர ஷீட் எதிர்பாராத விதமாக அவரது வயிற்றில் சரிந்தது. இதில், வயிற்றில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி