உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாங்காய் பறித்த வழக்கறிஞர் மின்சாரம் தாக்கி சாவு

மாங்காய் பறித்த வழக்கறிஞர் மின்சாரம் தாக்கி சாவு

சிதம்பரம், : சிதம்பரம் அருகே மரத்தில் மாய்காய் பறித்தபோது மின்சாரம் தாக்கி வழக்கறிஞர் உயிரிழந்தார்.்சிதம்பரம் அருகே லால்புரம் பெரியார்தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் கார்த்திகேயன், 27; வழக்கறிஞர். இவுர், நேற்று காலை தனது வீட்டு தோட்டத்தில் உள்ள மாமரத்தில், இரும்பாலான கம்பி மூலம் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரவிதமாக வீட்டிற்கு செல்லும்மின்சார கம்பியில் மாங்காய் பறிக்கும்கம்பி, மின்சார ஒயரில் மாட்டி மின்சாரம் தாக்கியதில், கார்த்தகேயன்தூக்கி வீசப்பட்டு மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரைசிதம்பரம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஏற்கனவே கார்த்திகேயன்இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து புகாரின் பேரில்,சிதம்பரம்தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை