உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவில் மகாலிங்கேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், 25ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.தொடர்ந்து நேற்று காலை 4:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 6:00 மணிக்கு யாத்ராதானம், கலசம் புறப்பாடகி 7:00 மணிக்கு கோவிலில் உள்ள அய்யனார், ஸ்ரீசெல்லியம்மனுக்கும், 8:15 மணிக்கு வெள்ளை விநாயகர், மகாலிங்கேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் ஆகிய விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ