உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

நெல்லிக்குப்பம்: கடலுாரில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 60 வயது மதிக்கதக்கவர் நேற்று நெல்லிக்குப்பம் வந்தார்.அவர், கொத்பாபள்ளி அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து இறந்த முதியவர் யாரென விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி