உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திரவுபதியம்மன் கோவிலில் பாலஸ்தாபன கும்பாபிேஷகம்

திரவுபதியம்மன் கோவிலில் பாலஸ்தாபன கும்பாபிேஷகம்

விருத்தாசலம் : ஊ.கொம்பாடிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் நடந்த பாலஸ்தாபன கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் அடுத்த ஊ.கொம்பாடிக்குப்பம், ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நேற்று பாலஸ்தாபன கும்பாபிேஷகம் நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாதனம், கணபதி ேஹாமம், மாலை 5:00 மணியளவில் வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜை, நடந்தது.நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மூலமந்திரம் ேஹாமம் நடந்தது. காலை 10:30 மணியளவில் முக்கிய நிகழ்வான பாலஸ்தாபன கும்பாபி ேஷகம் நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி