| ADDED : ஜூன் 12, 2024 11:59 PM
கடலுார் : கடலுாரில் வரும் 21ம் தேதி அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடக்கிறது.கடலுார் அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் வண்ணாரப்பாளையம் கடற்கரை சாலையில் அஞ்சலகங்களின்கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் 21ம் தேதி மாலை 3:00மணியளவில் அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்ற கூட்டம்நடக்கிறது.கூட்டத்தில், அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில்வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவைவிவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும். புகார்கள் மற்றும் குறைகள் இருந்தால்,அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் 607 001 என்றமுகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.