| ADDED : ஆக 18, 2024 11:30 PM
மந்தாரக்குப்பம்: பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள கிளை நுாலகத்தை கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் இடமாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை அரசு கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகள் அகற்றப்பட்டு என்.எல்.சி., நிர்வாகம் தற்போது அந்த இடத்தை கையகப்படுத்தியுள்ளது. எனவே என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் இருந்த கிளை நுாலகத்தை மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் இருந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட நுாலக கட்டடம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளதால் மாணவர்கள், முதியவர்கள் கிளை நுாலகத்திற்கு செல்ல சிரமப்படவேண்டிய நிலை உள்ளது.மேலும் கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகம் இல்லாததால் வாசகர்கள், மாணவர்கள், முதியவர்கள் உலக விஷயங்களை தெரியாமால் கவலை அடைகின்றனர். எனவே கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் சகல வசதிகளுடன் கிளை நுாலகத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.