| ADDED : மே 28, 2024 05:36 AM
புவனகிரி, : புவனகிரி தபால் நிலையம் இடமாற்றம்செய்யப்பட்டது.புவனகிரி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் சொந்த இடத்தில் தபால் நிலையம் இயங்கி வந்தது. கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலைக்குசென்றது.இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பொது நல அமைப்புகள் பாதுகாப்பு கருதி மாற்றி அமைக்கவும் பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும்கோரிக்கை வைத்தனர்.தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டு சுட்டிகாட்டப்பட்டது.அதையடுத்து, முதற்கட்டமாக பாதுகாப்பு கருதி, அங்காளம்மன்கோவில் அருகில் வாடகைகட்டத்திற்கு தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.நேற்று நடந்த திறப்பு விழாவில் புவனகிரி அஞ்சல் நிலைய அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர்குணசேகரன், நிர்வாகிகள் அன்பழகன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.மாவட்ட அஞ்சல் நிலைய கண்காணிப்பாளர் கணேஷ் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். சிதம்பரம் கோட்டக் கண்காணிப்பாளர் ஆசைதம்பி, கோட்ட தொழில் நுட்ப அலுவலர் சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புவனகிரி அலுவலக துணை அலுவலர் பாலச்சந்தர் நன்றிகூறினார்.