உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

சிதம்பரம்: வாலிபர் துாக்குப்போட்டு தற்காலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராகுல், 27; நேற்று முன்தினம் இரவு, சிதம்பரம் பெரியவாணி தெருவில் உள்ள ராகுலின், சித்தப்பாவுக்கு சொந்தமான கார் ஸ்டாண்டிற்கு, இரவு வாட்ச்மேன் வராததால், ராகுல் சென்று தங்கியிருந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில் பகலில் பணியாற்றும் வாட்ச்மேன், வந்து பார்த்தபோது, ராகுல், கார் ெஷட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை