உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி காலபைரவருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கணக்கர் சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை