உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியிடம் தகராறு தீக்குளித்தவர் சாவு

மனைவியிடம் தகராறு தீக்குளித்தவர் சாவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மனைவியிடம் தகராறில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விவசாயி உயிரிழந்தார்.நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், 46; விவசாயி. இவர், கடந்த 26ம் தேதி மனைவி புஷ்பலதாவிடம் ஏற்பட்ட தகராறில், மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அங்கு இறந்தார்.நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ