உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

சிதம்பரம் : நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அண்ணாமலை நகரில், அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. அதன்பேரில், அண்ணாமலை நகர் போலீசார், சாலியந்தோப்பு சாரதாராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 54; என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், அனுமதியின்றி, நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்து, வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி