உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பதிவு பெறாத மகளிர் விடுதி கலெக்டர் எச்சரிக்கை

பதிவு பெறாத மகளிர் விடுதி கலெக்டர் எச்சரிக்கை

கடலுார் : அரசு பதிவு பெறாமல் மகளிர் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அரசு உரிமம் பெற்று நடத்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விடுதிகள் செயல்படுவதற்காக அரசு உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தலுக்கு, அரசு இணையதளம் www.tnswp.com-ல் பதிவு செய்ய வேண்டும்.இணையதளத்தில் பதிவு செய்த நகலினை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலுார் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யாமல் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை