உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீரின்றி பயணிகள் அவதி பெண்ணாடம் பஸ் நிலைய அவலம்

குடிநீரின்றி பயணிகள் அவதி பெண்ணாடம் பஸ் நிலைய அவலம்

பெண்ணாடம், : பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, திருச்சி, கடலுார் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியில்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையேற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலைய வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் பராமரிப்பின்றி குடிநீர் நிலையம் பழுதானது. இதுவரை சீரமைக்கவில்லை.இதனால் குடிநீர் கிடைக்காமல் பயணிகள், பொது மக்கள் அவதியடைகின்றனர்.எனவே, பெண்ணாடம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை