உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார் : உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி, கடலுார் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கடலுார் டவுன் ஹாலில் நடந்த ஊர்வலத்தை, கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். எஸ்.பி., ராஜாராம் முன்னிலை வகித்தார்.இதில், 200க்கும் மேற்பட்ட மாணவிகள் புகையிலை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மேலும், புகையிலை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.அப்போது, மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் அபிநயா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ