போதை பொருள் கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது
கடலுார்: கடலுார் அருகே போதை பொருட்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் மேற்பார்வையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சுத்துக்குளம் ரயில்வே கேட் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக தனித்தனியே பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அதில் ஒருவர் தப்பினார். பிடிப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், சுத்துக்குளம், பெரியார் நகர் ராமலிங்கம் மகன் சீனுவாசன்,25; தியாகவல்லி சீனுவாசன் 45; என்பதும், 60 கிலோ ஹான்ஸ், 20 கிலோ கூலிப் பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, தப்பியோடிய ராஜவேலுவை தேடி வருகின்றனர். போதை பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போலீசாரை எஸ்,.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.