உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் போலீ சார், பொம்மையார்பாளை யம் சுற்றுலா தளமான ஆரோ பீச் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அ ப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் பாக்கெட்டில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிள்ளைச் சாவடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 30; புதுச்சேரி பிள்ளைச்சாவடி கார் தெருவைச் சேர்ந்த ரவீந்திர குமார், 31; சின்ன காலாப்பட்டு புது நகரைச் சேர்ந்த காமேஷ், 20; எனவும், சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை