உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி

பண்ருட்டி: ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு, 8 ஆடுகள் பலியாகின. பண்ருட்டி அடுத்த திருவதிகை ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று காலை 11:15 மணியளவில் புவனேஸ்வர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது தண்டவாள பகுதியை கடந்த, 8 ஆடுகள் ரயிலின் சக்கரத்தில் அடிப்பட்டு இறந்து போனது. மேலும், 2 ஆடுகள் காயமடைந்தன. இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ