உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு 

 பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு 

விருத்தாசலம்: திருமணமான பெண்ணை தவறாக பேசிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் பெரியார்நகர் சாமந்தி பூ நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி மோனிஷா, 28; இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இந்நிலையில், அதேப குதியைச் சேர்ந்த மனோஜ் குமார், 30, என்பவர் கடந்த 19ம் தேதி மோனிஷாவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், மோனிஷா உறவினர்களிடம், அவரை பற்றி மனோஜ்குமார் தவறாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் மனோஜ்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை