உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு  

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு  

பண்ருட்டி : சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன்,19; இவர், 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார், ஜெயகிருஷ்ணன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ