உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாசி மகத்திருவிழா பாதுகாப்பு கிள்ளையில் ஆலோசனை கூட்டம்

மாசி மகத்திருவிழா பாதுகாப்பு கிள்ளையில் ஆலோசனை கூட்டம்

கிள்ளை : கிள்ளையில், மாசி மகத்திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கிள்ளையில், மாசி மகத்திருவிழா வரும் 24ம் தேதி நடக்கவுள்ளதை முன்னிட்டு கிள்ளை போலீசில் ஆலோசனைக் கூட்டம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், போலீசார் குறிப்பிடும் வழித்தடங்களில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும், போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஊர்வலம் நடத்த வேண்டும். சாமி சிலைகளை ஏற்றிவரும் வாகனத்தில் அதிகளவில் ஆட்களை ஏற்றிவரக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களில் மற்றும் ஊர்வலத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் விவேக், ராம்குமார், தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார், தமிழரசன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ