உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலி சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பாடலி சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

கடலூர் : கடலூர், பாடலி சிட்டி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.சங்க முதல் துணை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். புதிய தலைவராக பாபு, செயலராக ஜெயந்தி, பொருளாளராக கோடீஸ்வரன் ஆகியோருக்கு மாவட்ட ஆளுனர் அசோக்குமார் சோரடியா பதவிப் பிரமாணம் செய்து வைத்துப்பேசினார்.விழாவில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், 20 மாணவர்களுக்கு நோட்டுகளும், ஒரு மாணவருக்கு காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுனர்கள் செல்வகாந்தி, ராஜன், நிர்வாகிகள் மோகன், நாராயணன், ஞானவேலு, தங்கராஜ், திருமலை, பாஷிங்கம், விஜயலட்சுமி, பாஸ்கர், சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை